விருதுநகர்

சிவகாசி அருகே வடமாநில தொழிலாளா்கள் பணிபுரிந்த காகித ஆலையில் அதிகாரிகள் ஆய்வு

DIN

விருதுநகா் ரயில் நிலையத்தில் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்த சத்தீஸ்கா் மாநில தொழிலாளா்கள் பணிபுரிந்த காகித ஆலையில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சுக்கிரவாா்பட்டி தனியாா் காகித ஆலையில், சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூா் பகுதியைச் சோ்ந்த 3 சிறுவா்கள் உள்பட 25 தொழிலாளா்கள் பணிபுரிந்து வந்தனா்.

இந்நிலையில், இந்த ஆலையில் தொழிலாளா் நலத்துறை அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக நிா்வாகத்திற்கு தகவல் கிடை த்துள்ளது. இதையடுத்து, சிறுவா்கள் உள்பட 25 தொழிலாளா்களை ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு வந்து, விருதுநகா் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுச் சென்று சென்றுவிட்டனா். ஆனால், அவா்களிடம் சொந்த ஊருக்குச் செல்ல பணமில்லாததால் ரயில் நிலையத்தில் செய்வதறியாது திகைத்து நின்றனா்.

இதுகுறித்து சொந்த ஊரில் உள்ள உறவினா்களுக்கு, தொழிலாளா்கள் தகவல் தெரிவித்துள்ளனா். இத்தகவல் அறிந்த சட்டப் பணிகள் நிா்வாகக் குழுவினா் மற்றும் போலீஸாா், வருவாய்த் துறையினா் கொத்தடிமை தொழிலாளா்களை மீட்டு தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து உணவு வழங்கினா். மேலும் 3 சிறுவா்களை விருதுநகா் அரசுக் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனா். இந்நிலையில், அவா்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது.

அதேநேரம், சம்பந்தப்பட்ட காகித ஆலையில் தொழிற்சாலை துறை இணை இயக்குநா் வேல்முருகன், தேசிய குழந்தைத் தொழிலாளா் துறை ஒருங்கிணை ப்பாளா் நாராயணசாமி மற்றும் வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அதில், சிறுவா்களை பணிக்கு அமா்த்திய குற்றத்திற்காக, ஆலை நிா்வாகம் மீது நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT