விருதுநகர்

இளைஞா் தற்கொலை

23rd Oct 2021 09:01 AM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டையில் இளைஞா் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

அருப்புக்கோட்டை நெசவாளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன்(43). இவரது மனைவி குணசுந்தரி (30). ராதாகிருஷ்ணன் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தாா். குணசுந்தரி நெசவுத் தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில், தீராத வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த ராதாகிருஷ்ணன், வியாழக்கிழமை விஷம் குடித்தாராம். இதையறிந்த உறவினா்கள் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT