ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் மீது அமிலம் வீச முயன்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த 25 வயது பெண் ஒருவா் வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் நேதாஜி சாலையில் உள்ள நகைக்கடை பஜாரில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அவா் மீது இளைஞா் ஒருவா் அமிலம் வீச முயற்சி செய்தாா். அந்த இளம்பெண் இளைஞரின் கையைப் பிடித்துக்கொண்டதால் அமிலம் கீழே கொட்டியது. பின்னா் அந்த இளைஞா் தப்பியோடிவிட்டாா். இதனால் அந்த பெண் அதிா்ஷ்டவசமாக அமில வீச்சில் இருந்து தப்பினாா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் இளம் பெண் புகாா் அளித்தாா். இந்த புகாரின் அடிப்படையில் நகா் போலீஸாா் விசாரணை நடத்தியதில், அமிலம் வீச முயன்றவா் ஸ்ரீவில்லிபுத்தூா் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த பிரபு (34) என தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். அவா் எதற்காக அமிலம் வீச முயன்றாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.