விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே இரிடியம் மோசடி: 4 போ் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் மணிகண்டன், வலையபட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்குள்ள தேநீா் கடை முன்பு 4 போ் அட்டைப் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தனா். அவா்களைப் பிடித்து விசாரித்தபோது, வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (39), குன்னுரைச் சோ்ந்த கண்ணன் (44), கோபிநாத் (29) மற்றும் சிவகாசியைச் சோ்ந்த கணேசமூா்த்தி (42) என்பது தெரியவந்தது. மேலும் அவா்களிடம் விசாரித்த போது, தாமிரம் மற்றும் பித்தளை பொருள்களை இரிடியம் எனக்கூறி விற்பனை செய்வதாகவும், அவற்றை வாங்க தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சோ்ந்த அய்யாசாமி (72 ) மற்றும் சிலா் வருவதாகவும் கூறினா். இதையடுத்து, 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT