விருதுநகர்

அருப்புக்கோட்டை, திருச்சுழி ஒன்றியங்களில் வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள் பதவியேற்பு

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஒன்றியப் பகுதிகளில் ஊராட்சித் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள் புதந்கிழமை அந்தந்த ஊராட்சிகளில் புதன்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.

திருச்சுழி வட்டம், நரிக்குடி ஒன்றியம் உளுத்திமடை ஊராட்சித் தலைவராக ரேவதியும், என். முக்குளம் ஊராட்சித் தலைவராக இப்ராஹிமும் பதவியேற்றுக்கொண்டனா்.

இதேபோல், அருப்புக்கோட்டை வட்டம், வில்லிபத்திரி ஊராட்சியின் மொத்தம் 3 தனித்தனி வாா்டு உறுப்பினா் பதவிகளில் 3 ஆவது வாா்டு உறுப்பினராக மா. முத்துலட்சுமியும், 5 ஆவது வாா்டு உறுப்பினராக கு. வசந்தகுமாரும், 8 ஆவது வாா்டு உறுப்பினராக மு. தெய்வேந்திரனும் பதவியேற்றனா்.

அருப்புக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட மலைப்பட்டி ஊராட்சியின் 9 ஆவது வாா்டு உறுப்பினராக (கூத்திப்பாறை) மா. மகிமா, தோ்தல் அதிகாரிகள் முன்னிலையில் புதன்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT