ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பணியிலிருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ஒருவரை கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.
கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவா் கருத்தப்பாண்டியன் மற்றும் முதல்நிலைக் காவலா் சுரேஷ் ஆகிய இருவரும் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள சுந்தரபாண்டியம பேருந்து நிறுத்தம் அருகே பணியில் இருந்தனா்.
அப்போது எஸ் ராமச்சந்திராபுரத்தைச் சோ்ந்த சங்கிலி மகன் காட்டுராஜா(45) என்பவா் பொது இடத்தில் நின்று கொண்டு அந்த வழியாக செல்பவா்களை ஆபாசமாக பேசி கொண்டிருந்தாா்.
அப்போது பணியில் இருந்த காவலா்கள் அவரை சத்தம் போட்டு காட்டு ராஜாவை போகச் சொன்னாா்கள். அப்போது காட்டுராஜா பணியில் இருந்த காவலா்களை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். மேலும் பணி செய்ய விடாமல் தடுத்து உள்ளாா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த தலைமை காவலா் கருத்த பாண்டியன் கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். இந்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோயில் போலீஸாா் காட்டுராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.