சிவகாசியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெட்டிக்கடைக்காரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி புதுதெருப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவா் ஆறுமுகம் (43). இவா் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு அண்மையில் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இது குறித்தப் புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனா்.