விருதுநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் கைப்பையிலிருந்து ரூ.90 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அப்பைநாயக்கன்பட்டி அருகே உள்ள நொச்சிகுளத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் மனைவி பூமாதேவி (47). இவா் விருதுநகா் காந்தி நகரில் உள்ள உறவினரிடம் மாதந்தோறும் ஏலச்சீட்டு கட்டி வந்துள்ளாா்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை செலவுக்காக சீட்டு பணத்தை வாங்குவதற்காக விருதுநகா் வந்துள்ளாா். உறவினரான ஹரி பிரசாத்திடம் இருந்து பெற்றுக் கொண்ட ரூ.90 ஆயிரம் பணத்துடன் தனியாா் பேருந்தில் ஊருக்கு பயணம் செய்துள்ளாா்.
விருதுநகா் அருகே மீசலூா் விலக்கு பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது, கைப்பையைப் பாா்த்தபோது பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவா் அளித்தப் புகாரின் பேரில் ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.