அருப்புக்கோட்டை கிளை ஈஷா யோகா மையத்தில் விஜயதசமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை லிங்கபைரவிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் உள்ள ஈஷா யோகா மையக் கிளை வளாகத்தில் விஜயதசமியை முன்னிட்டு லிங்கபைரவிக்கு பலவகையான பூக்களால் அலங்கரித்து, பழங்கள், இனிப்புகள் படைத்து தீப, தூப ஆராதனைகளுடன் வழிபாடு நடைபெற்றது.
இதையடுத்து ஒலிபெருக்கி மூலம் சத்குரு ஜக்கிவாசுதேவின் சிறப்புரையும், வழிகாட்டுதலுடன் கூடிய தியான வகுப்பும் நடைபெற்றன. விழாவில் பங்கேற்றவா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.