விருதுநகரில் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வுக்குத் தயாராகும் இளைஞா்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
விருதுநகா், முத்துராலிங்க நகரில் உள்ள அரசு ஊழியா் சங்க அலுவலகக் கட்டடத்தில் ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வுக்கு பயிற்சி பெறுவதற்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதில் பயிற்சி பெற்ற சுமாா் 2500-க்கும் மேற்பட்டோா் வருவாய், காவல், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில் நிகழாண்டிற்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
இந்நிகழ்ச்சிக்கு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் லியாகத் அலி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வைரவன், கூட்டுறவு துணைப் பதிவாளா் பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளரான ரவீந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு அரசு தோ்வில் பங்கேற்க உள்ளோா்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினா். முடிவில் மாவட்ட இணைச் செயலா் ராஜன் நன்றி தெரிவித்தாா்.
சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்கள் மட்டும் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் ஆா்வமுள்ளவா்கள் கலந்து கொள்ளலாம். இதற்கென எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது என சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.