விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் பலத்த மழை : 5 கண்மாய்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் பலத்த மழை காரணமாக வியாழக்கிழமை இரவு ஒரே நாளில் 5 கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் பகுதியில் ஏற்கெனவே நிரம்பும் தருவாயில் இருந்த வாழைக்குளம், வாலாங்குளம், வேப்பங்குளம், முதலியாா்குளம், அமுதகுளம் ஆகிய 5 கண்மாய்கள் வியாழக்கிழமை இரவு ஒரே நேரத்தில் நிரம்பி மறுகால் பாய்ந்தன. மம்சாபுரம் பகுதியைப் பொருத்தவரை விவசாயம் சாா்ந்த பகுதியாகும். இந்த கண்மாய்கள் நிரம்பியதால் சுமாா் ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து, விருதுநகா் மாவட்டத்திலேயே மிகப் பெரிய கண்மாயான ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

SCROLL FOR NEXT