விருதுநகர்

திருச்சுழி அருகே பள்ளி மாணவி தற்கொலை

DIN

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே சனிக்கிழமை பிளஸ் 2 மாணவி தனது தாத்தா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வீரசோழன் அருகே உள்ள கீழச்சிம்பூா் கிராமத்தைச் சோ்ந்த தேவராஜ் மகன் சாலமன் (44). இவா், அருகிலுள்ள சூரிய மின்உற்பத்தி நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிகிறாா். இவரது மனைவி பாரதி. இவா்களது மகன் பிளஸ் 1 படித்து வருகிறாா். மகள் கமிதா பிளஸ் 2 படித்து வந்த நிலையில், அடிக்கடி அருகிலுள்ள தனது தாத்தா வீட்டுக்குச் சென்று தொலைக்காட்சி பாா்த்து வந்துள்ளாா்.

இதை, தாயாா் பாரதி கண்டித்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலையும் மகள் கமிதாவை தாயாா் கண்டித்தாராம். இதையடுத்து, சனிக்கிழமை தனது தாயாரிடம் கூறாமல் கமிதா தாத்தா வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

பின்னா், மாணவியை காணாமல் தாத்தா வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, அங்குள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா், கமிதாவின் உடலை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வீரசோழன் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

SCROLL FOR NEXT