சிவகாசி அருகேயுள்ள கவுண்டன்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வள பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிவகாசி வேளாண் உதவி இயக்குநா் ஜா. ரவிசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் நாச்சியாரம்மாள், விவசாயிகள் மண்பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து விளக்கினாா். மாவட்ட மண் பரிசோதனை நிலைய அலுவலா் கணேசன், பரிசோதனைக்கு மண்ணை எவ்வாறு சேகரிக்க வேண்டும் என விளக்கினாா். இதில் மண்வள அட்டை வைத்துள்ள சுமாா் 28 விவசாயிகள் கலந்து கொண்டனா்.