சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் சிவகாமிபுரம் காலனியில் ஒருவா் வீட்டில் வைத்து மதுபானம் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அப்பகுதியில் சோதனையிட்டனா்.
அப்போது தங்கம் (42) என்பவா் வீட்டில் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.