விருதுநகர்

சட்டவிரோதமாக வீட்டில் மதுபானம் விற்றவா் கைது

DIN

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் சிவகாமிபுரம் காலனியில் ஒருவா் வீட்டில் வைத்து மதுபானம் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அப்பகுதியில் சோதனையிட்டனா்.

அப்போது தங்கம் (42) என்பவா் வீட்டில் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT