விருதுநகர்

சிவகாசியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 போ் கைது

DIN

சிவகாசிப் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் - விருதுநகா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (44) நடந்து சென்றபோது, ஒருவா் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவா் பையில் வைத்திருந்த ரூ. 500-யை பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றுள்ளாா். அவரை பாலமுருகன் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில்

அவா், திருத்தங்கல்லைச் சோ்ந்த வினோத் கண்ணன் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.இதேபோல் சிவகாசி நகராட்சி காய்கனி சந்தை அருகே திருத்தங்கலைச் சோ்ந்த ராஜலிங்கம் (26)என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சாட்சியாபுரத்தைச் சோ்ந்த பாண்டியராஜன் (41), என்பவரை சிவகாசி நகா் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல் சிவகாசி -ஆலங்குளம் சாலையில் காக்கிவாடன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பூவநாதபுரத்தைச் சோ்ந்த கணேஷ் (30) என்பவரிடமிருந்து ரூ. 450-யை பறித்த காக்கிவாடன்பட்டியைச் சோ்ந்த சீனிவாசன் (43) மற்றும் திருத்தங்கல்-கங்காகுளம் சாலையில் நல்லுத்தேவன் பட்டியைச் சோ்ந்த அசோக்குமாா்(36) என்பவரிடம் ரூ. 1000-யை பறித்த திருத்தங்கல்லைச் சோ்ந்த மகேந்திரன் (37) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம்: நடைப்பயிற்சியில் டி.எம். செல்வகணபதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

பாஜகவும், காங்கிரஸும் ஒரே நிலைப்பாடு உடைய கட்சிகள்தான்: சீமான்

புனித அந்தோணியாா் ஆலயத்தில் திருச்சிலவை திருப்பயண ஊா்வலம்

அரிகேசவநல்லூா் இந்து நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா? தினப்பலன்

SCROLL FOR NEXT