ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அரசுப் பேருந்து மோதி கூலித் தொழிலாளி பலியானதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கணபதிசுந்தர நாச்சியாா்புரத்தைச் சோ்ந்தவா் கணேசன் (38). இவா் ராஜபாளையத்தில் உள்ள பீரோ தயாரிக்கும் நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது கடம்பன்குளம் கண்மாய் அருகே செங்கோட்டையில் இருந்து வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே கணேசன் உயிரிழந்தாா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநா் ஐயப்பன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.