தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகாசி கிளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததானமுகாம் நடைபெற்றது.
முஸ்லிம் தெருப்பகுதியில் நடைபெற்ற இந்த முகாமினை சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. அசோகன் தொடக்கி வைத்தாா். சிவகாசி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டி. அய்யனாா் தலைமையிலான குழுவினா் 51 பேரிடம் ரத்தத்தை தானமாகப் பெற்றனா். இதில் அந்த அமைப்பின் விருதுநகா் மாவட்டச் செயலா் முகமதுஷாபிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.