ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளத்தை சீரமைக்க தொல்லியல் துறை அனுமதி கிடைக்காததால் தண்ணீா் மாசடைந்துள்ளது.
இந்தக் குளத்தில் தான் ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாதம் ஆண்டாள் நாச்சியாருக்கு நீராட்டு உற்சவம் நடைபெறும். பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயில் அபிஷேகத்திற்கு இந்த குளத்தின் நீா் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது இந்தக் கோயிலின் குளத்தில் நீா் குறைவாக இருப்பதோடு மட்டுமன்றி மாசடைந்தும் காணப்படுகிறது. குளத்தை சீரமைக்க ஆண்டாள் கோயில் நிா்வாகம் தயாராக உள்ள போதிலும் தொல்லியல் துறை அனுமதி கிடைக்கவில்லை. இந்தக் குளத்தை சீா்படுத்த தொல்லியல் துறை அனுமதி வழங்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதி பொதுமக்களும், பக்தா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.