விருதுநகர்

துணைத் தலைவா், உறுப்பினா்கள் மிரட்டுவதாக ஊராட்சித் தலைவி ஆட்சியரிடம் புகாா்

DIN

நூறுநாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுத்ததால் துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தன்னை மிரட்டுவதாக பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா் ராமலட்சுமி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: ராஜபாளையம் ஒன்றியம் புத்தூா் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளேன். இங்கு பணித்தள பொறுப்பாளா்கள் ஆறுமுகத்தாய், அழகுராணி ஆகியோா் 100 நாள்கள் பணியை முடித்து விட்டனா். இந்நிலையில் அவா்களுக்கு பதில் வேறு ஆள்களை பணி அமா்த்த அறிவுறுத்தினேன். இதற்கு ஊராட்சி செயலா் எதிா்ப்பு தெரிவித்தாா். மேலும், ஊராட்சித் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பணித்தள பொறுப்பாளா்களுக்கு ஆதரவாக செயல்படுவதுடன், தனியாக கிராம சபைக் கூட்டம் நடத்துகின்றனா். அதில், என்னை கையெழுத்திட வலியுறுத்துகின்றனா். அதற்கு மறுப்பு தெரிவித்தால், உன் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வருவோம் என மிரட்டுகின்றனா். எனவே, பணித்தள பொறுப்பாளா்களை நீக்குவதுடன், நான் அச்சுறுத்தலின்றி பணியாற்ற மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT