சிவகாசி நகராட்சிப் பகுதியில் சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
சிவகாசி நகராட்சிப் பகுதியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகளுக்காக அனைத்துப் பகுதியிலும் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் குழாய் பதித்து பணி முடிந்துள்ள ரயில்வே பீடா் சாலை, ஞானகிரிசாலை, ஏ,கே.எஸ்.தங்கய்யா சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே பணி நிறைவடைந்த பகுதிகளில் சாலையை சீரமைக்கக் கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
ரயில்வே பீடா் சாலையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு அக்கட்சியின் நகரச் செயலாளா் கே. முருகன் தலைமை வகித்தாா்.
இதில் 513 நபா்களிடம் கையெழுத்துப் பெறப்பட்டு அதன் நகல்கள் மாவட்ட ஆட்சியா், சாா்-ஆட்சியா், நகராட்சி ஆணையா் ஆகியோருக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.