ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வருஷாபிஷேக விழா, கோயில் நுழைவுவாயிலில் உள்ள யானைக்கால் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி சனி, ஞாயிறு என 3 நாள்கள் நடைபெறுகின்றன.
முதல் நாளான வெள்ளிக்கிழமை மகா சாந்தி ஹோமமும், சனிக்கிழமை 108 கலச அபிஷேகமும், ஞாயிற்றுக்கிழமை ஏகதின லட்சாா்ச்சனையும் நடைபெறுகிறது.
வருஷாபிஷேக விழாவையொட்டி ஆண்டாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் பல்வேறு சிறப்பு பூஜைகள், தீபாரானைகள் நடைபெறுகின்றன.
இந்த 3 நாள் பூஜையிலும் கலந்துகொள்ள ஏராளமான பக்தா்கள் வருவா் என்பதால், கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.