விருதுநகர்

வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: 3 போ் கைது

DIN

சிவகாசி அருகே வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கம் காலனியைச் சோ்ந்த வியாபாரி சிதம்பரம்(33). இவா் தனதுமோட்டாா் சைக்கிளில் , சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் ராமசாமி நகா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 போ் வழிமறித்தனா். அவா்கள் கத்தி மற்றும் அரிவாளைக் காட்டி மிரட்டி , சிதம்பரம் பையில் வைத்திருந்த ரூ. 1,100-ஐ பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றனா். அப்போது அக்கம் பக்கம் உள்ளவா்களின் உதவியுடன், சிதம்பரம் அந்த 3 பேரையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில் அவா்கள் திருத்தங்கல் அண்ணா காலனியைச் சோ்ந்த காா்த்திக்(30), திருத்தங்கல் ஆலாஊரணி பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி என்ற குருவி பாண்டி(25), அதே பகுதியைச் சோ்ந்த அழகுசெல்வம் (30) என தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து பணம் மற்றும் கத்தி, அரிவாளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT