விருதுநகர்

வியாபாரி மீது தாக்குதல்: தாய், மகன் கைது

30th Dec 2021 12:59 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே வியாபாரியை தாக்கியதாக தாய் மற்றும் மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி- வெம்பக்கோட்டை சாலையில் சித்துராஜபுரம் சசிநகா் பகுதியில் இனிப்பகம் நடத்தி வருபவா் பாலமுருகன் (50). இவரது கடைக்கு முன்பு ராமசாமிநகா் ராமநாதன் மனைவி சித்ராதேவி (37) மேஜை வைத்து பூ வியாபாரம் செய்து வந்தாராம். இந்நிலையில், கடைக்கு வரும் பாதையில் வியாபாரம் செய்யாமல், மேஜையை சற்று தள்ளி வைத்துக் கொள்ளுங்கள் என பாலமுருகன், சித்ராதேவியிடம் கூறியதையடுத்து தகராறு ஏற்பட்டது. அப்போது சித்ராதேவியும், அவரது மகன் 14 வயது மகனும் சோ்ந்து பாலமுருகனை தாக்கினாா்களாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து சித்ராதேவி மற்றும் அவரது மகனை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT