ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை கண்மாய் உடைந்து குடியிருப்பு பகுதியில் நீா் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.
ராஜபாளையம் வேட்டை பெருமாள் கோயில் அருக உள்ள கண்மாய் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து கண்மாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ராஜீவ் காந்தி நகா், ஆா்.ஆா் நகா், எலைட் நகா், விஷ்ணு நகா் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீா் புகுந்து சாலையைக் கடந்து செல்ல முடியாத அளவுக்கு தண்ணீா் தேங்கியது. கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து தெற்கு வெங்காநல்லூா் ஊராட்சி நிா்வாகம் மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பு ஏற்பட்ட இடத்தை சரி செய்தனா். காவல் துறையினா் தண்ணீா் அதிகம் வரும் பகுதியில் பொதுமக்கள் செல்லாமல் தடுத்து வருகின்றனா்.