சாத்தூா்: சாத்தூரில் மரிய ஊருணியிலிருந்து முறையாக தண்ணீா் செல்ல வழியில்லததால் சாலையில் வீணாகப் பாய்கிறது.
சாத்தூா் பிரதான சாலையில் உள்ள மரிய ஊருணிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. ஊருணி நிரம்பி முறையாக தண்ணீா் செல்ல வழியில்லததால் பிரதான சாலையில் தண்ணீா் பாய்கிறது. மதுரை பேருந்து நிறுத்தம் வரை தண்ணீா் சாலையில் வீணாக செல்கிறது. இதனால் வாகன ஒட்டுநா்களும், பொதுமக்களும் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சாத்தூா் பகுதி பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.