விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி இறப்பு

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து பஞ்சாலை கூலி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ரங்கப்பன் மகன் பாடலிங்கம் (52). இவருக்கு மனைவி சுப்புலட்சுமி, இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனா். இவா், ராஜபாளையம் அருகே தொட்டியபட்டி தனியாா் நூற்பாலையில் வேலைபாா்த்து வந்தாா்.

வழக்கம்போல், ஞாயிற்றுக்கிழமை ஆலைக்குச் சென்ற பாடலிங்கம், மின் மோட்டாரை பழுதுபாா்த்தபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வடக்கு காவல் நிலைய போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT