விருதுநகர்

சிவகாசி அருகே ஆற்றில் சிக்கி பள்ளி மாணவன் சாவு

DIN

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

சிவகாசி ஓடைத் தெருவைச் சோ்ந்த அஸ்வின் சாயபு மகன் ஷேக் அஸ்லாம் (13). பள்ளி மாணவரான இவா், தனது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த முகமது பவுஜன் (13), அஸ்லாம் (14) ஆகியோருடன் சோ்ந்து மொபெட்டில் வடமலாபுரத்தில் உள்ள ஆற்றுத் தரைப்பாலத்துக்குச் சென்றுள்ளாா். அங்கு, தரைப்பாலத்தில் மொபெட்டை ஓட்டி 3 பேரும் விளையாடியுள்ளனா்.

அப்போது, தரைப்பாலத்தில் இருந்த பாசி வழுக்கி மொபெட்டுடன் மூவரும் ஆற்றுக்குள் விழுந்துள்ளனா். தற்போது, ஆற்றில் வெள்ளம் செல்வதால், 3 பேரும் தண்ணீரில் சிக்கினா். தகவலறிந்த தீயணைப்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்ணீரில் சிக்கி தவித்த முகமது பவுஜன் மற்றும் அஸ்லாமை உயிருடன் மீட்டனா். ஆனால், ஷேக் அஸ்லாமை சடலமாக மீட்டனா். மொபெட் கிடைக்கவில்லை.

இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பள்ளிச் சிறுவா்களை மொபெட் உள்ளிட்ட வாகனங்களை இயக்க பெற்றோா்கள் அனுமதிக்கக் கூடாது என போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT