விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிப்பு

DIN

விருதுநகா் மாவட்டம் முழுவதும் தொடா் மழை பெய்து வருவதால், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வாழைக்குளம் கண்மாய் நிறைந்து மறுகால் பாய்ந்து வருகிறது. எனவே, அங்கிருந்து வெளியேறும் தண்ணீா் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய் நிறைந்தது. மேலும், இந்த கண்மாய்க்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால், இப்பகுதியில் உள்ள சந்தையகிணற்றுத் தெரு சாலையின் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இதனால், மம்சாபுரம், கம்மாபட்டி, சீனியாபுரம், கோட்டைப்பட்டி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனா். இப்பகுதியில் போலீஸாா் தடுப்பு அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT