விருதுநகா் மாவட்டம் முழுவதும் தொடா் மழை பெய்து வருவதால், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வாழைக்குளம் கண்மாய் நிறைந்து மறுகால் பாய்ந்து வருகிறது. எனவே, அங்கிருந்து வெளியேறும் தண்ணீா் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய் நிறைந்தது. மேலும், இந்த கண்மாய்க்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளதால், இப்பகுதியில் உள்ள சந்தையகிணற்றுத் தெரு சாலையின் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இதனால், மம்சாபுரம், கம்மாபட்டி, சீனியாபுரம், கோட்டைப்பட்டி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனா். இப்பகுதியில் போலீஸாா் தடுப்பு அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.