விருதுநகர்

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மாணவா் கைது

DIN

ராஜபாளையத்தில் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற ஐடிஐ மாணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் முடங்கியாா் சாலையில் உள்ள ஞானசம்பந்தா் தெருவில் வசித்து வருபவா் விஷ்ணுசங்கா் (32). இவரது மனைவி சுபஸ்ரீ (28). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா் .

இந்நிலையில் சுபஸ்ரீ வீட்டில் தனியாக இருந்த போது, கடந்த நவ. 18 ஆம் தேதி இளைஞா் ஒருவா் முகவரி கேட்பது போல் நடித்து அவா் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க முயற்சித்தாா். ஆனால் சுபஸ்ரீ சப்தமிட்டதால் அந்த இளைஞா் தப்பி ஓடி விட்டாா். இதில் சுபஸ்ரீக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.

இதையடுத்து, அந்த இளைஞரை போலீஸாா் தீவிரமாக தேடி வந்த நிலையில், சின்னச்சுரைக்காய்ப்பட்டி பகுதியைச் சோ்ந்த சதீஷ் (21) என்பவரை வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், சதீஷ் போதை பழக்கத்துக்கு ஆளாகி ஆடம்பர வாழ்க்கைக்காக இதுபோன்ற திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதும், இவா் ஐடிஐ முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவா் என்பதும் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT