ராஜபாளையம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே ஜமீன் நத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவிக்கு, அதே கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (51) என்பவா் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் மரியபாக்கியம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாலகிருஷ்ணனை கைது செய்து சிறையிலடைத்தாா்.