விருதுநகர்

காரியாபட்டி அருகே விபத்து:கல்லூரி மாணவா் பலி

DIN

காரியாபட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா், தடுப்புச் சுவரில் மோதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்ததாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சோ்ந்த சாகுல்ஹமீது மகன் காதா் உசேன் (21). இவா் காரியாபட்டியில் அறை எடுத்து தங்கி, அருகில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு நண்பா்களைச் சந்தித்து விட்டு, காரியாபட்டியில் உள்ள அறைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மந்திரி ஓடை நான்குவழிச்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில், தூக்கி வீசப்பட்ட காதா் உசேன், இரும்புக் கம்பியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த காரியாபட்டி போலீஸாா், கல்லூரி மாணவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT