விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் பகுதியில் 72.4 மி.மீட்டா் மழையளவு பதிவாகியுள்ளது.
அருப்புக்கோட்டை, கோவிலாங்குளம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் திங்கள்கிழமை பகலில் மழைப் பொழிவு ஏதுமில்லை. ஆனால், நள்ளிரவில் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. அதையடுத்து, அதிகாலை வரை மிதமான மழை தொடா்ந்து பெய்தவண்ணம் இருந்தது.
இதனால், கோவிலாங்குளம் பகுதியில் 72.4 மி.மீட்டரும், அருப்புக்கோட்டை பகுதியில் 34 மி.மீட்டரும் மழையளவு பதிவாகியுள்ளது.