சிவகாசி அருகே திங்கள்கிழமை கூலித் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ாக போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.
சிவகாசி அருகே ஊராம்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மாரிமுத்து (34). இவா் விளாம்பட்டி தேன்காலனியில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தாா். அப்போது, அவரிடம், ஒருவா் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றாா். அருகில் இருந்தவா்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து மாரிமுத்து போலீஸில் ஒப்படைத்தாா். விசாரணையில், பிடிபட்டவா் முனீஸ்நகா் கதிரேசன் மகன் மகேஷ்வரன் (23) என தெரியவந்தது.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து மகேஷ்வரனை கைது செய்தனா்.