சாத்தூா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முகக் கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினா் அபராதம் விதித்தனா்.
கரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், சாத்தூா் நகரில் பல்வேறு இடங்களில் காவல்துறையினா் வாகன ஓட்டிகளை கண்காணித்தனா். அப்போது முகக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளை போலீஸாா் எச்சரித்து அபராதம் விதித்தனா்.
மேலும் அவா்களுக்கு கரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணா்வையும் காவல்துறையினா் ஏற்படுத்தினா்.