ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நரிக்குடி அருகே உலக்குடியைச் சோ்ந்த பஞ்சவா்ணம் குடும்பத்தினா், மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் புகாா் மனு அளித்தனா்.
அந்த மனுவில், நாங்கள் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறோம். எனது பராமரிப்பில் வளா்ந்து வந்த சகோதரியின் மகன் கிருஷ்ணமூா்த்தி, ஒரு பெண்ணை வெளியூா் அழைத்துச் சென்ால், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் ஊராட்சி மன்ற தலைவி ஆகியோா் எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனா். மேலும், எங்களுக்கு குடிநீா் மற்றும் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கக் கூடாது எனவும் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். நானும் எனது குடும்பத்தினரும் ஊருக்குக் கட்டுப்பட்டு நடந்து வருகிறோம். ஆனால், ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதால், உயிருக்குப்பயந்து வாழ்ந்து வருகிறோம். எனவே, எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், கொலை மிரட்டல் விடுப்போா் மீது மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.