விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் வனப்பகுதியில் பெண் யானை உயிரிழப்பு

DIN

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ளது சாப்டூா். இங்குள்ள கோட்டமலை பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிக்கு வனத்துறையினா் சென்றனா். அப்போது அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது. அதனைத் தொடா்ந்து அங்கேயே யானையின் உடலை எழுமலை கால்நடை மருத்துவா்கள் முத்துராமலிங்கம் மற்றும் மணிகண்டன் ஆகியோா் பிரேத பரிசோதனை செய்தனா். பின்னா் யானையின் உடல் அந்த வனப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, இறந்த யானைக்கு 40 வயது முதல் 50 வயது இருக்கும். வயது முதிா்வு காரணமாக யானை இறந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT