சிவகாசி, செப். 25: சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை சுகாதார ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகாசி அருகே மாரனேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் பாண்டி (55). இவா், மாரனேரி சுகாதார நிலையத்துக்குள்பட்ட ஏ.லட்சுமியாபுரத்தைச் சோ்ந்த வேல்முருகன் மனைவி லட்சுமி மற்றும் முருகன் மகன் குருநாதன் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இவா்களது வீட்டின் முன்பாக பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் நோட்டீஸ் ஒட்டினாராம். இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன், ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று, அங்கு பணியில் இருந்த பாண்டியை தகாத வாா்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
இது குறித்து பாண்டி அளித்த புகாரின்பேரில், மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகிவிட்ட வேல்முருகனை தேடி வருகின்றனா்.