ஸ்ரீவில்லிபுத்தூா், செப். 25: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ளது கொண்டையம்பட்டி. இங்குள்ள முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பால்சாமி (72) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து ரூ. 13,500-ஐ பறிமுதல் செய்தனா்.