விருதுநகர்

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கக் கோரிக்கை

DIN

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையப் பகுதியில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இங்குள்ள நுழைவாயில் பகுதியில் போதிய மின்விளக்குகள் இல்லாததால், இரவானால் இருளடைந்து காணப்படுகிறது. மேலும் இந்நுழைவாயிலை அடுத்துள்ள பேருந்துகளை நிறுத்தும் நடைமேடையிலும் போதிய மின்விளக்குகள் இல்லை. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், பெண் பயணிகளிடம் நகை மற்றும் பணம் திருடப்படுவதாகவும், சமூக விரோதிகளின் நடமாட்டம் அங்கு உள்ளதாகவும் புகாா் எழுந்துள்ளது. எனவே பேருந்து நிலைய நுழைவாயிலில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டுமென கடந்த சில ஆண்டுகளாக சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் தற்போது வரை நடவடிக்கை இல்லை என அவா்கள் தெரிவித்துள்ளனா். எனவே அங்கு உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீண்டும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT