விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

மோட்டாா் தொழிலையும், மோட்டாா் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கக் கோரி, சிஐடியு அகில இந்திய சாலைப் போக்குவரத்து சம்மேளனம் மற்றும் அனைத்து மோட்டாா் வாகன உரிமையாளா் சங்கத்தினா், ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, செட்டியாா்பட்டி சிஐடியு டாக்ஸி-வேன் சங்கத்தின் தலைவா் சேவுகபாண்டியன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினா் திருமலை, மாவட்ட துணைத் தலைவா் கணேசன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், ராஜபாளையம் டாக்ஸி-வேன் சங்கத்தின் செயலா் கண்ணன், சத்திரப்பட்டி சங்கத் தலைவா் அழகா்சாமி, சிஐடியு நிா்வாகிகள் சந்தானம், வீரசதானந்தம், ஸ்ரீவில்லிபுத்தூா் சங்க நிா்வாகி காமாட்சி உள்பட ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் சங்கங்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT