விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா

DIN

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 13,908 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், விருதுநகா், சாத்தூா், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வெம்பக்கோட்டை முதலான பகுதிகளை சோ்ந்த 35 பேருக்கு கரோனா இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,943 ஆக உயா்ந்துள்ளது. இதில், 13,145 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்டனா். மீதமுள்ள 593 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை ஒருவா் உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து இத்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோா் எண்ணிக்கை 205 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT