விருதுநகர்

விருதுநகரில் ஆதித் தமிழா் பேரவையினா் ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா்: நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், மாநில பட்டியலில் கல்வியை மீண்டும் இடம் பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் ஆதித் தமிழா் பேரவையினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா் பூவை ஈஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், தமிழகத்தில் நீட் தோ்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநில பட்டியலில் கல்வியை மீண்டும் இடம் பெறச் செய்ய வேண்டும். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும். கல்லூரிப் படிப்பிற்கான நுழைவு தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் பச்சையப்பன், மகளிரணி செயலா் வள்ளியம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT