விருதுநகா்: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலுக்காக விருதுநகரிலிருந்து 930 கட்டுப்பாட்டு கருவிகள், 860 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை கொண்டு செல்லப்பட்டன என மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்தாா்.
விருதுநகா் நகரில் உள்ள ராமநாதபுரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திலிருந்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கு தேவையான கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ரா.கண்ணன் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் ரா. மங்களராமசுப்பிரமணியன், வட்டாட்சியா்கள் (தோ்தல்) அய்யாக்குட்டி உள்பட அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.