விருதுநகர்

சிவகாசியில் பால் வியாபாரி வெட்டிப் படுகொலை

DIN

சிவகாசியில் திங்கள்கிழமை அதிகாலை பால் வியாபாரி ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வெம்பக்கோட்டை சாலையில் உள்ள ராணி அண்ணா காலனியைச் சேர்ந்தவர் முனியசாமி வயசு 53. இவர் சுமார் 20க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வியாபாரம் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் இவர் திங்கள்கிழமை அதிகாலை மாட்டில் பால் கறக்க சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சிவகாசி நகர் காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை செய்து வருகிறார்கள். 

சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டனர். இதுகுறித்து சிவகாசி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT