சிவகாசியில் திங்கள்கிழமை அதிகாலை பால் வியாபாரி ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வெம்பக்கோட்டை சாலையில் உள்ள ராணி அண்ணா காலனியைச் சேர்ந்தவர் முனியசாமி வயசு 53. இவர் சுமார் 20க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் திங்கள்கிழமை அதிகாலை மாட்டில் பால் கறக்க சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சிவகாசி நகர் காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டனர். இதுகுறித்து சிவகாசி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.