சிவகாசி : சிவகாசி அருகே சனிக்கிழமை அனுமதியின்றி மினிலாரியில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசு திரிகட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சிவகாசி- மாரனேரி சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பூலாவூரணி பேருந்து நிறுத்தம் அருகே வந்த மினிலாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அதில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் வெள்ளைத் திரிகட்டுகள் இருந்தன. அவற்றை கொண்டு செல்ல உரிய அனுமதி எதுவும் பெற வில்லை எனத் தெரிவித்த போலீஸாா், திரிகட்டுகளை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநா் பாலமுருகனை (24) கைது செய்தனா்.