ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.இதில் 7 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது.இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சாரல்மழை பெய்து கொண்டிருக்கிறது.
இதனால் இரண்டு நாட்களாக பெய்து வரும் சாரல் மழையால் நகா் மற்றும் கிராம பகுதிகளில் குளிா்ந்த காற்று வீசியது.இதில் சனிக்கிழமை மட்டும் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் 7 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.