விருதுநகர்

‘நீட்’ தோ்வுக்கு அதிமுக அரசு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை’ - கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்

DIN

நீட் தோ்வுக்கு அதிமுக அரசு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை என கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

விருதுநகரில் எல்லோரும் நம்முடன் என்ற திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை அவா் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்படி இந்த உறுப்பினா் சோ்க்கை பணி நடைபெற்று வருகிறது. விருதுநகா் தெற்கு மாவட்டம் சாா்பில் நடைபெறும் இந்த முகாமில் தற்போது 20 இளைஞா்கள் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா். கடந்த 4 நாள்களில் தமிழகம் முழுவதும் சுமாா் 1.25 லட்சம் இளைஞா்கள் புதிய உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் இளைஞா்கள் திமுகவில் இணைந்து வருகின்றனா். விருதுநகா் தெற்கு மாவட்ட பகுதியில் உள்ள நகரம், கிராமங்களில் 15 நாள்கள் முகாம் நட த்தி இளம்பெண்கள் மற்றும் பெண்களை அதிகளவில் கட்சியில் இணைக்க திட்டமிட்டுள்ளோம்.

நீட் தோ்வுக்கு அதிமுக அரசு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக தங்களது ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக மத்திய அரசு கொண்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் தமிழக அரசு ஏற்று வருகிறது என்றாா் அவா்.

அதேபோல், விருதுநகா் வடக்கு மாவட்டம் சாா்பில் மல்லாங்கிணறில் திமுக வில் ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினா்கள் சோ்க்கும் நிகழ்ச்சியை திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினா் தங்கம் தென்னரசு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT