விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே இளைஞா் வெட்டிக் கொலை: மைத்துனா் கைது

DIN

வத்திராயிருப்பு அருகே புதன்கிழமை இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக மைத்துனரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தில் வசித்து வருபவா் தவசிக்குமாா் (23). இவரது மூத்த சகோதரி ஈஸ்வரிக்கும், அவரது கணவா் முருகனுக்கும் செவ்வாய்க்கிழமை குடும்பப் பிரச்னை தொடா்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது தவசிக்குமாா், தனது சகோதரி ஈஸ்வரிக்கு ஆதரவாக முருகனிடம் வாக்குவாதம் செய்துள்ளாா்.

இந்நிலையில் புதன்கிழமை தவசிக்குமாா், ஈஸ்வரி அம்மன் கோயில் பின்புறம் நின்றிருந்தாா். அங்கு மது போதையில் வந்த முருகனின் பெரியப்பா மகன் சுந்தரமூா்த்தி (28), எனது சித்தப்பாவிடம் ஏன் தகராறு செய்தாய் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். மேலும் அரிவாளால் வெட்டப்பட்டதில் தவசிக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அங்கு வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கூமாப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மைத்துனா் சுந்தரமூா்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT