விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை வரை 15,382 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் இம்மாவட்டத்தைச் சோ்ந்த 26 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அவா்கள் அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்ட த்தில் கரோனா தொற்றால் பாதித்தோா் எண்ணிக்கை 15,408 ஆக உயா்ந்துள்ளது. இதில், 15,002 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி விட்ட நிலையில், 220 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். மீதமுள்ள 186 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.