ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவா் ஜயந்தி விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அருப்புக்கோட்டையில் அதிமுகவினா் சாா்பில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேவா் ஜயந்தி விழாவில் பங்கேற்ற எடப்பாடி கே.பழனிசாமி, பின்னா் அருப்புக்கோட்டை, காரியாபட்டி வழியாக மதுரை விமான நிலையம் சென்றாா். அருப்புக்கோட்டைக்கு காரில் வந்த அவரை, பாரதி நகரில் அதிமுக நகரச் செயலாளா் சக்திவேல் பாண்டியன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் யோகா வாசுதேவன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபா ஆகியோா் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி ஒன்றிய அதிமுகவினா் சாா்பில் சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாளுக்கு அா்ச்சனை செய்து தருவிக்கப்பட்ட பிரம்மாண்ட மலா் மாலை அணிவித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத்தொடா்ந்து ஆயிரக்கணக்கானோா் வழிநெடுகிலும் நின்று முதல்வரை வரவேற்றனா்.